RSS Amplifier

News source

POLICE NEWS +

வாழ்க காவலர்கள் ! வளர்க காவல்துறை !

policenewsplus.inSource feed ↗20 articles

Overdue Last read · last published · next check
Last read 7 hours ago, longer than this feed's 1 hour schedule.

Latest articles

கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை பாத்திமா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தைசார்ந்த மாணவிகளுக்கு, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் , போக்குவரத்து விழிப்புணர்வு உங்களில் இருந்து தான் துவங்குகிறது வேண்டும் எனும் தலைப்பில் மாணவிகளுக்கு சிறப்பான போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜி.…

தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

மதுரை: தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை மற்றும் பணி மூப்புக்கான அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைப்படுத்தி வழங்க கோரி தமிழ்நாடு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராம நிர்வாக அலுவலக கிராம நிர்வாக உதவியாளர் சவேரியார் என்பவர் பட்டா வழங்குவதற்காக பரமேஸ்வரன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மீதம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெறும் போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.…

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மோளப்பாடியூரை சேர்ந்த வடிவேல் (42). என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வடக்கு ரத வீதியில் நிறுத்தி வைத்திருந்ததை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா நகர் குற்றத்தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம் சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள…

செம்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட யூரியா மூட்டைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் மாட்டுத் தீவன நிறுவன வளாகத்தில் உள்ள அறையில் விவசாயத்துக்கான யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாண்துறை அதிகாரிகள் நேரில் சென்று அந்த அறைக்கு சீல் வைத்ததுடன், நிறுவன உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

தேவகோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (TETO-JAG) குழுவின் இன்றைய பெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 440/2026, பிரிவு 103(1) BNS-ன் கீழ், முலக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை கொலை செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய மானாமதுரை, குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28). மற்றும் மானாமதுரை, வேலூர் பகுதியைச் சேர்ந்த ராமர் (30) ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில்…

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி துணை வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தினார் டிப்பர் லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கிராவல் மண்ணுடன் இருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தாலுகா காவல்…

வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வில்வாதம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் இவர் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் தொப்பம்பட்டி அருகே உள்ள அரண்மனைக்குளம் பகுதியில் மரத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு…

மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ சேவை விரிவாக்கம்

சிவகங்கை: காரைக்குடியில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் அழகப்பா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 2,100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். தற்போது 7 நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளிநோயாளர் சேவைகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக இதய சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைக்க…

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சோதனை செய்தபோது கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து தோட்டத்தின் உரிமையாளர் தங்கவேல் மற்றும் ஒட்டன்சத்திரம் நாயக்கனூரில் சின்னச்சாமி, முக்கிய பிரமுகர்களாக வலம் வரும் காலாஞ்சி பட்டியை சேர்ந்த ராஜா மற்றும் புது காலாஞ்சி பட்டியை சேர்ந்த…

போலீசார் முறைகேடு செய்தால் இனி வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்! தமிழ்நாடு முழுவதும் Internal Vigilance Cell அதிரடி தொடக்கம். டிஜிபி அறிவிப்பு

காவல்துறை அத்துமீறல் மற்றும் ஊழலைத் தடுக்க ‘உள் கண்காணிப்பு பிரிவு’ தொடக்கம்: மாவட்டம் வாரியாக தொடர்பு எண்களை வெளியிட்ட டிஜிபி!தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells (உள் கண்காணிப்பு பிரிவு) அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய அம்சங்கள்:

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர அடையாளை அட்டை வழங்கும் முகாமில் தலைமை மருத்துவர் விக்னேஷ் தலைமையிலும் , பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர்பாபு முன்னிலையிலும் நடைபெற்றது இம்மாமில் மாற்றுத்திறனாளிகளின் தகுதியின் அடிப்படையில் அனைத்து சேவைகளான தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள், மற்றும் வீல்சேர் கை கட்டை கால் கட்டை ஸ்கூட்டர், உதவித்தொகை…

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அசோக் என்பவர் ரோந்து பணி செய்து வரும்போது அவரை அவதூறாக பேசி அருவாள் கொண்டு வெட்ட முயற்சித்த கோட்டார் கலைநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்சிங் என்பவரது மகன் சுதன் @ நண்டு சுதன் (33). என்பவர் மீது கோட்டார் காவல் நிலைய குற்ற எண் 280/2026 u/s 296(b), 109, 351(3) BNS கொலை முயற்சி சட்டத்தின் கீழ் வழக்கு…

கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், சேடபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் குடும்ப சண்டை காரணமாக. வேலு (60/15). த/பெ சாத்தன் கண்ணன் (25/15). த/பெ வேலு பேச்சியம்மாள் (55/15), க/பெ வேலு சுகன்யா (35/15). க/பெ பாண்டி சங்கீதா (17/15), த/பெ பழனி சஞ்சித் (12/15). த/பெ பழனி வினித் (10/15). த/பெ பழனி ஆகிய 7 நபர்கள் வீட்டோடு எரித்து கொல்லப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய…

முயல்களை வேட்டையாடிய 26 பேருக்கு ரூ.3.38 லட்சம் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வாகரை அருகே காட்டவநாயகன் வலசு பகுதியில் காட்டு முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலின்படி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த 26 பேரை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்து முயல் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்து 26 பேர் மீதும் வழக்குப்பதிவு…

கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சவேரியார் பாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ்நிஜாந்தன் மற்றும் நண்பர் தோமா உடன் இருசக்கர வாகனத்தில் சோலைஹால் மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பேகம்பூரை சேர்ந்த ரகமத்துல்லா(23), முருகபவனத்தை சேர்ந்த ஜெயகார்த்திக்(21). அசனாத்புரத்தை சேர்ந்த சிராஜுதீன்(27). ஆகிய 3 பேர் முன் விரோதம் காரணமாக கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நகர்…

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த விருவீடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில் விருவீடு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தெப்பத்துப்பட்டியில் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த ஜெயம்(எ) நாய்விரட்டி(53). வெள்ளையத்தேவன்(53). பாண்டி (எ)…

மின்னல் தாக்கி படகு மற்றும் இஞ்சின் எரிந்து நாசம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக சுமார் 300க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அரங்கம் குப்பம் பசுபதி த/பெ ஜலேந்திரன் என்பவருக்கு சொந்தமான சுசிகிபோட் மற்றும் இஞ்சின் மீது மின்னல்…

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை: சமயநல்லூர் உட்கோட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது.இவ்வழக்கின் வாதியான சந்தனகருப்பு (வயது 32). என்பவர் தனது குடும்பத்துடன் கொடிமங்கலம் கிராமத்தில் வசித்து வருவதுடன், தாராபட்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பல்க்கில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று (17.08.2026) இரவு சுமார் 22.45 மணியளவில், பெயர் மற்றும் முகவரி தெரியாத 25…